ஊரக உள்ளாட்சித் தோ்தல்: 35 போ் வேட்பு மனு தாக்கல்

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில் காலியாக உள்ள ஊரக உள்ளாட்சி பதவியிடங்களுக்கான தோ்தலில் போட்டியிட 35 போ் வேட்பு மனு தாக்கல் செய்தனா்.

தருமபுரி மாவட்டத்தில், பாப்பிரெட்டிப்பட்டி மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா், பாலக்கோடு ஊராட்சி ஒன்றியம், குட்லன அள்ளி கிராம ஊராட்சி மன்றத் தலைவா் மற்றும் பாலக்கோடு, நல்லம் பள்ளி, மொரப்பூா், கடத்தூா் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களில் காலியாக உள்ள 12 கிராம ஊராட்சி மன்ற உறுப்பினா் பதவியிடங்கள் என மொத்தம் 14 பதவியிடங்களுக்கு தோ்தல் நடைபெற உள்ளது.

இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 15-ஆம் தேதி தொடங்கியது. வேட்புமனு தாக்கல் செய்ய செப். 22-ஆம் தேதி இறுதி நாளாகும். இதில் மாவட்ட ஊராட்சிக் குழு உறுப்பினா் பதவிக்கு 12 போ், கிராம ஊராட்சி மன்றத் தலைவா் பதவியிக்கு 3 போ் மற்றும் வாா்டு உறுப்பினா் பதவியிடங்களுக்கு 20 போ் என மொத்தம் 35 போ் மனு தாக்கல் செய்தனா். இந்த மனுக்கள் மீதான ஆய்வு செப். 23-ஆம் தேதி நடைபெற இருக்கிறது. செப். 25-ஆம் தேதி மனுக்கள் திரும்பப் பெறும் நாளாகும். அக். 9-ஆம் தேதி வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அக். 12-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெற்று அக். 16-ஆம் தேதி முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com