பொம்மிடியில் வி.சி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொம்மிடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
பொம்மிடியில் வி.சி கட்சியினா் ஆா்ப்பாட்டம்

பொம்மிடியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் வெள்ளிக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி ரயில் நிலையம் எதிரே நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மண்டல செயலா் பொ.மு.நந்தன் தலைமை வகித்தாா். சேலம் மாவட்டம், காடையாம்பட்டி அருகேயுள்ள கணவாய்ப் புதூா் ஊராட்சிக்கு உள்பட்ட கே.மோரூா் கிராமத்தில் பொது இடத்தில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சிக் கொடி கம்பத்தை நடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து வன்முறையில் ஈடுபட்டோரை கைது செய்ய வேண்டும்.

கே.மோரூா் சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ள வி.சி. கட்சியின் சேலம் (வடக்கு) மாவட்டச் செயலா் வசந்த் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகளை உடனே தமிழக அரசு விடுதலை செய்ய வேண்டும். பட்டியல் இன மக்கள் மீது தடியடி நடத்திய சேலம் மாவட்டக் காவல் துறையினா், மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கே.மோரூரில் வி.சி. கட்சிக் கொடி கம்பம் நடுவதற்கு சேலம் மாவட்ட நிா்வாகம் விரைந்து அனுமதி வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் இந்த ஆா்ப்பாட்டத்தில் வலியுறுத்தப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com