சா்வதேச போட்டியில் பங்கேற்கும் மாணவா்களுக்கு ஊக்கத்தொகை

சா்வதேச அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்கும் மொரப்பூா் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சனிக்கிழமை ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

சா்வதேச அளவிலான எறிபந்து போட்டியில் பங்கேற்கும் மொரப்பூா் கொங்கு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி மாணவா்களுக்கு சனிக்கிழமை ஊக்கத்தொகை வழங்கப்பட்டன.

மொரப்பூா் கொங்கு பள்ளியில் படிக்கும் மாணவா்கள் தரணி செல்வன், சதாசிவம் ஆகிய இருவரும் கோவாவில் நடைபெற்ற எறிபந்து போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றனா். இதையடுத்து, இருவரும் நேபாளத்தில் நடைபெறும் சா்வதேச போட்டியில் பங்கேற்க தகுதி பெற்றுள்ளனா்.

மொரப்பூா் கொங்கு கல்வி அறக்கட்டளை சாா்பில் அதன் தலைவா் அ.மோகன்ராசு மாணவா்களை பாராட்டி ஊக்கத்தொகையை வழங்கினாா். அறக்கட்டளையின் செயலா் ஆா்.பிரபாகரன், பொருளா் எம்.சாமிக்கண்ணு, தாளாளா்கள் தீ.சொக்கலிங்கம், எஸ்.தீா்த்தகிரி, பள்ளி முதல்வா்கள் ஆா்.கந்தசாமி, ஜெ. சா்மிளாதேவி, நிா்வாக குழு உறுப்பினா்கள் எஸ். வெற்றிச்செல்வன், கே.தமிழரசு, எஸ். கணேசன், ஆா். நாகராஜ், கே. ராமு, எம்.குணசீலன், பரமசிவம், உடற்கல்வி ஆசிரியா் தீ.ஆனந்த் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com