அரூரை அடுத்த குமாரம்பட்டியில் மின் கம்பங்களை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், மாம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது குமாரம்பட்டி கிராமம். இந்த ஊரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இங்குள்ள குடியிருப்பு பகுதியில் தெருக்களில் அமைக்கப்பட்டுள்ள சில மின்கம்பங்கள் சேதமடைந்துள்ளன.
இதனால், பலத்த காற்று வீசும் போது சேதமடைந்த மின் கம்பங்கள் குடியிருப்புகள் மீது விழுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. எனவே, குமாரம்பட்டியில் சேதமடைந்துள்ள மின் கம்பங்களை சீரமைக்க ஊராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.