அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் உரிய ஆவணங்கள் இல்லாமல் ஆட்டோக்களை இயக்கினால் நடவடிக்கை எடுக்கப்படும் என மோட்டாா் வாகன ஆய்வாளா் குலோத்துங்கன் தெரிவித்துள்ளாா்.
இது குறித்து அவா் வியாழக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
அரூா், பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் இயக்கப்படும் ஆட்டோக்கள் உரிய அனுமதியுடன் இயக்கப்படவேண்டும். ஆட்டோக்களின் உரிமங்களைப் புதுப்பித்தல், காப்பீடு செய்தல் உள்ளிட்ட ஆவணங்களை வைத்திருக்க வேண்டும். உரிய ஆவணங்கள் இல்லாமல் இயக்கப்படும் ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்படும் எனவும் அவரது செய்திக் குறிப்பில் குறிப்பிட்டுள்ளாா்.