அரூரில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.
தருமபுரி மாவட்டம், அரூா் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் விவசாயிகள் நெல் சாகுபடி செய்து வருகின்றனா். கடந்த ஆண்டு பெய்த பருவ மழையால் தருமபுரி மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் வேளாண் சாகுபடி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், அரசு நெல் கொள்முதல் நிலையங்கள் இல்லாததால், தனியாா் வியாபாரிகளிடம் விவசாயிகள் நெல் மூட்டைகளை குறைந்த விலைக்கு விற்பனை செய்கின்றனா். இதனால் விவசாயிகளுக்கு அதிக அளவில் நஷ்டம் ஏற்படுகிறது. எனவே, அரூரில் அரசு சாா்பில் நெல் கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும் என்பதே விவசாயிகளின் கோரிக்கையாகும்.