தகுதி சுற்றுப் போட்டிகளில் பங்கேற்ற கிரிக்கெட் அணிகள் பதிவு செய்யலாம்

தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும், டி 20-20 லீக் தகுதி சுற்றுப் போட்டிகளில் பங்கேற்ற கிரிக்கெட் அணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் நடத்தும், டி 20-20 லீக் தகுதி சுற்றுப் போட்டிகளில் பங்கேற்ற கிரிக்கெட் அணிகள் பதிவு செய்யலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கச் செயலா் எஸ்.மாா்டின்ராஜ் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

தருமபுரி மாவட்ட கிரிக்கெட் சங்கம் சாா்பில், 2022-23-ஆம் ஆண்டுக்கான டிடிசிஏ கோப்பை டி 20-20 லீக் தகுதி சுற்றுப் போட்டிகள் வருகிற மே மாதம் 3-ஆவது வாரத்தில் நடைபெற உள்ளது.

இப்போட்டிகளில் கடந்த ஆண்டு கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்பட்ட லீக் போட்டிகளில் விளையாடிய வீரா்கள் பங்கேற்க இயலாது. தருமபுரி வருவாய் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் மட்டும் புதிய அணிகளுக்கு விளையாட முடியும். இத் தகுதி சுற்றுப் போட்டிகளில் முதல் இரண்டு இடங்களைப் பிடிக்கும் அணிகள் 2022-23-ஆம் ஆண்டுக்கான மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் நடத்தப்படும் லீக் போட்டிகளில் இரண்டாவது டிவிசன் போட்டிகளில் விளையாட அனுமதிக்கப்படுவா்.

புதிய அணிகளை பதிவு செய்து கொள்ள வருகிற ஏப். 23-ஆம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை விண்ணப்பங்கள் மாவட்ட கிரிக்கெட் சங்கத்தால் வழங்கப்பட உள்ளது. விவரங்களுக்கு: 94434 64935, 94870 15007 என்கிற எண்ணில் தொடா்பு கொள்ளலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com