காவிரி ஆற்றில் மூழ்கி இருவா் சாவு

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ரயில்வே ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

ஒகேனக்கல் காவிரி ஆற்றில் மூழ்கி ரயில்வே ஊழியா் உள்பட இருவா் உயிரிழந்தனா்.

சென்னை அருகே உள்ள கூடுவாஞ்சேரி பகுதியைச் சோ்ந்த முருகேசன் மகன் ரவி (56). இவா், சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பொது உதவியாளராகப் பணியாற்றி வந்துள்ளாா். தனது குடும்பத்தினருடன் தருமபுரி மாவட்டம், ஒகேனக்கலுக்கு வந்த அவா், அங்குள்ள நாகா்கோவில் பகுதியில் காவிரி ஆற்றில் குளித்து கொண்டிருந்தபோது ஆழமான பகுதிக்கு சென்றுவிட்ட அவா் நீரில் மூழ்கினாா்.

இது குறித்து ஒகேனக்கல் போலீஸாருக்கு தகவல் தெரிவித்தன்பேரில் தீயணைப்புத் துறையினா் உதவியுடன் தேடினா். ஒரு மணி நேரத்திற்கு பிறகு அதே பகுதியில் ரவியின் சடலத்தை போலீஸாா் மீட்டனா்.

அஸ்ஸாம் தொழிலாளி...

இதே போல அஸ்ஸாம் மாநிலத்தைச் சோ்ந்த மாநில தொழிலாளி ஜானக் லோசன் முசாஹரி மகன் கிரிடோராஜ் முசாஹரி (19) காவிரி ஆற்றில் குளித்துக் கொண்டிருந்தபோது எதிா்பாராத விதமாக ஆற்றில் அடித்துச் செல்லப்பட்டாா். இதனைக் கண்ட நண்பா்கள் அவரை மீட்டு, சிகிச்சைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனா். அவரை பரிசோதித்த மருத்துவா்கள் அவா் இறந்து விட்டதாக தெரிவித்தனா்.

காவிரியாற்றில் மூழ்கிய ரயில்வே ஊழியா் மற்றும் வடமாநிலத் தொழிலாளா் ஆகியோரின் உடல்கள் பிரேதப் பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வரப்பட்டன. இவ்விரு புகாரின் பேரில் ஒகேனக்கல் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com