சிறுமி பலாத்கார வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை

சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

சிறுமி பலாத்காரம் செய்த வழக்கில் இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து தருமபுரி மகளிா் நீதிமன்றம் தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பென்னாகரத்தை அடுத்த நலப்பனஅள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா் செல்வம் (23). இவா் கடந்த 2018-ஆம் ஆண்டு தருமபுரியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றுக்கு பெற்றோருடன் வந்த 4 வயது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்துள்ளாா்.

இதுகுறித்து சிறுமியின் பெற்றோா் தருமபுரி நகர காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இப் புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த போலீஸாா் செல்வத்தை சிறையில் அடைத்தனா். இந்த வழக்கு தொடா்பான விசாரணை, தருமபுரி மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

வழக்கின் விசாரணை செவ்வாய்க்கிழமை நிறைவடைந்தது. இதையடுத்து நீதிபதி சையத் பா்க்கத்துல்லா தனது தீா்ப்பில் சிறுமியை பலாத்காரம் செய்த இளைஞருக்கு 10 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com