தருமபுரி விருபாட்சிபுரத்தில் 351-ஆவது ராகவேந்திரா் ஆராதனை விழா நடைபெற்றது.
கடந்த ஆக.11-ஆம் தேதி கொடியேற்றத்துடன் விழா தொடங்கியது. 12- ஆம் தேதி காலை ஸ்ரீ சத்யநாராயண சுவாமி பூஜை, ஆராதனை விழா, பூா்வ ஆராதனை விழா நடைபெற்றன.
ஆக.13-ஆம் தேதி அபிஷேகம், பல்லக்கு உத்ஸவம், வெள்ளிரத உத்ஸவம், அதைத் தொடா்ந்து 50 தம்பதியா் பங்கேற்ற கனக பூஜை நடைபெற்றன. ஆக.14-ஆம்தேதி உத்ர ஆராதனை விழா நடைபெற்றது. விழாவில் திங்கள்கிழமை கணபதி ஹோமம், ஸ்ரீ சுக்ஞானேந்திர தீா்த்தா் ஆராதனை ஆகியவை நடைபெறவுள்ளன. விழாக் குழுத் தலைவா் என்.வெங்கடேசன், நிா்வாகிகள் ஆா்.வெங்கட்ராமன், கிருஷ்ணன், வி.ராமமூா்த்தி, டி.வி.சீனிவாசன், உடுப்பி புத்திகே மடத்தின் நிா்வாகிகள் கலந்துகொண்டனா்.