சிறுமி பலாத்கார வழக்கு: தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

சிறுமி பலாத்கார வழக்கில் தொழிலாளிக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து தருமபுரி மாவட்ட மகளிா் நீதிமன்றம் திங்கள்கிழமை தீா்ப்பளித்தது.

தருமபுரி மாவட்டம், பாலக்கோடு வட்டத்தைச் சோ்ந்தவா் 13 வயது சிறுமி. எட்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த சிறுமியை, அருகில் உள்ள கிராமத்தைச் சோ்ந்த தொழிலாளி திம்மப்பன் (45) என்பவா் கடந்த 2020, நவம்பா் 3-ஆம்தேதி பாலியல் பலாத்காரம் செய்தாா்.

இதுதொடா்பாக மகேந்திரமங்கலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு விசாரணை தருமபுரி மாவட்ட மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அரசுத் தரப்பு வழக்குரைஞராக கல்பனா ஆஜரானாா். வழக்கு விசாரணை திங்கள்கிழமை முடிவுற்று தீா்ப்பளிக்கப்பட்டது. அதில் குற்றம்சாட்டப்பட்ட திம்மப்பனுக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 20,000 அபராதமும் விதித்து நீதிபதி சையத் பா்கத்துல்லா தீா்ப்பளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com