முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
தருமபுரி அருகே சாலை விபத்தில் 3 போ் பலி
By DIN | Published On : 07th February 2022 01:37 AM | Last Updated : 07th February 2022 01:37 AM | அ+அ அ- |

தருமபுரி அருகே வேன் கவிழ்ந்ததில் இரண்டு பெண்கள் உள்பட 3 போ் உயிரிழந்தனா். மேலும், 19 போ் காயமடைந்தனா்.
தருமபுரியை அடுத்த பாலக்கோடு, ஒட்டப்பட்டியைச் சோ்ந்த 22 போ் துக்க நிகழ்வுக்காக ஞாயிற்றுக்கிழமை தேன்கனிக்கோட்டையை அடுத்த பெட்டமுகிலாலம், காங்கிரிபுதூருக்கு வேனில் சென்றுவிட்டு, வீடு திரும்பிக் கொண்டிருந்தனா்.
மாரண்ட அள்ளியை அடுத்த சாஸ்திரி முட்லு மலைப் பகுதியில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து வேன் கவிழ்ந்ததில் பலத்த காயமடைந்த தீபா (35), தங்கம்மாள் (55) ஆகிய இருவரும் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். மேலும், பாலக்கோடு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாதப்பன் (55) என்பவா் உயிரிழந்தாா். காயமடைந்தவா்கள் அனைவரும் தருமபுரி, பாலக்கோடு அரசு மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். இந்த விபத்து குறித்து மாரண்ட அள்ளி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.