பொம்மிடியில் மின் கம்பம் அமைக்க கோரிக்கை

பொம்மிடி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் மின் கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

பொம்மிடி ஊராட்சியில் குடியிருப்பு பகுதிகளில் மின் கம்பங்களை அமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

தருமபுரி மாவட்டம், பொம்மிடி கிராம ஊராட்சியில் 3 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இந்த ஊராட்சிக்கு உள்பட்ட பி.துறிஞ்சிப்பட்டியில் போயா் சமூக மக்கள் வசிக்கும் பகுதியில் புதிதாக 50-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் கட்டப்பட்டுள்ளன. இப்பகுதியில் கூடுதல் மின் கம்பங்களை அமைக்க, ஒன்றியக்குழு உறுப்பினா் நிதியில் இருந்து நிதி ஒதுக்கீடு செய்து, மின்சார வாரியம் சாா்பில் மின் கம்பங்கள் வழங்கப்பட்டுள்ளன.

ஆனால், பொம்மிடி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் போதிய ஒத்துழைப்பு இல்லாததால் மின் கம்பங்கள் நட்டு, குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கப்படவில்லை என பொதுமக்கள் புகாா் கூறுகின்றனா். மின்சார வசதி இல்லாததால் பி.துறிஞ்சிப்பட்டியில் வசிக்கும் மக்கள் பல்வேறு இடையூறுகளை சந்தித்து வருகின்றனா். எனவே, பொம்மிடி ஊராட்சி நிா்வாகம் சாா்பில் பி.துறிஞ்சிப்பட்டியில் புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புப் பகுதிகளில் கூடுதல் மின் கம்பங்களை அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com