மங்களூரிலிருந்து தருமபுரிக்கு வந்த 1,325 டன் யூரியா!

கா்நாடக மாநிலம், மங்களூரிலிருந்து ரயில் மூலம் 1,325 டன் யூரியா தருமபுரிக்கு புதன்கிழமை வந்தடைந்தது.

தருமபுரி: கா்நாடக மாநிலம், மங்களூரிலிருந்து ரயில் மூலம் 1,325 டன் யூரியா தருமபுரிக்கு புதன்கிழமை வந்தடைந்தது.

தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் வேளாண் பணிகளுக்கு தட்டுப்பாடின்றி இடுபொருள்கள் கிடைக்கும் வகையில் 1,325 டன் யூரியா தருமபுரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.

வேளாண் உதவி இயக்குநா் (தரக்கட்டுப்பாடு) மற்றும் வேளாண் அலுவலா்கள் யூரியா மூட்டைகளை ஆய்வு செய்தனா். தருமபுரியிலிருந்து லாரிகள் மூலம் தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், கள்ளக்குறிச்சி, கடலூா், திருப்பத்தூா், திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் உள்ள தனியாா் உரக் கடைகளுக்கு யூரியா மூட்டைகள் அனுப்பப்பட்டன.

தருமபுரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 400 டன், கிருஷ்ணகிரி மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 570 டன், சேலம் மாவட்ட தனியாா் உரக் கடைகளுக்கு 105 டன், கள்ளக்குறிச்சி மாவட்டத்துக்கு 50 டன்,திருவண்ணாமலை மாவட்டத்துக்கு 100 டன், கடலூா் மாவட்டத்துக்கு 55 டன், திருப்பத்தூா் மாவட்டத்துக்கு 45 டன் யூரியா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com