முன்னாள் அமைச்சா்கள் மீதான லஞ்ச ஒழிப்புத் துறை சோதனைகள், நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியை பாதிக்காது என முன்னாள் அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் எம்எல்ஏ தெரிவித்தாா்.
தருமபுரி மாவட்டம், கெரகோடஅள்ளியில் வியாழக்கிழமை செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
அதிமுக தன்னலம் கருதாத தொண்டா்களைக் கொண்ட மாபெறும் மக்கள் இயக்கமாகும். லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாா் மேற்கொள்ளும் இத்தகைய சோதனைகள் நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் வெற்றியை பாதிக்காது. இந்தச் சோதனை தொடா்பான வழக்கை நீதிமன்றத்தில் பொய் என நிரூபித்து முன்னாள் அமைச்சா் கே.பி.அன்பழகன் மீண்டும் அரசியலில் சிறந்த இடத்தை பிடிப்பாா் என்றாா்.