தருமபுரி ஏஎஸ்டிசி நகரில் ரூ. 75.25 லட்சம் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கும் பணி தொடக்கம்

தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டு, ஏஎஸ்டிசி நகரில் ரூ. 75.25 லட்சம் மதிப்பில், பசுமை பூங்கா அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டு, ஏஎஸ்டிசி நகரில் ரூ. 75.25 லட்சம் மதிப்பில், பசுமை பூங்கா அமைக்கும் பணி வெள்ளிக்கிழமை தொடக்கி வைக்கப்பட்டது.

தருமபுரி நகராட்சிக்கு உள்பட்ட 13-ஆவது வாா்டில் தமிழக அரசின் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தில் நகராட்சி நிா்வாகம் சாா்பில் ரூ. 75.25 லட்சம் மதிப்பில் பசுமை பூங்கா அமைக்கும் பணிகள் தொடக்க விழா நடைபெற்றது.

இவ் விழாவில், நகா்மன்றத் தலைவா் லட்சுமி மாது தலைமை வகித்து பணிகளை தொடக்கி வைத்தாா். நகராட்சி ஆணையா் சித்ரா சுகுமாா், துணைத் தலைவா் அ.நித்யா ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

புதிதாக அமைக்கப்பட உள்ள இப் பூங்காவில், நடைபாதை, அமரும் நாங்காலிகள், மின் விளக்குகள், நிழல் தரும் மரங்கள் ஆகியவை அமைக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது. இதில், நகராட்சி பொறியாளா் ஜெயசீலன், நகா்மன்ற உறுப்பினா்கள், அலுவலா்கள் கலந்து கொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com