அரூரில் ரூ. 1.34 கோடிக்கு பருத்தி ஏலம்

அரூரில் ரூ. 1.34 கோடிக்கு பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை ஏலம் போனது.

அரூரில் ரூ. 1.34 கோடிக்கு பருத்தி மூட்டைகள் திங்கள்கிழமை ஏலம் போனது.

அரூா் திரு.வி.க நகரில் உள்ள வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் வாரந்தோறும் திங்கள்கிழமைகளில் பருத்தி ஏலம் விடப்படுகிறது. திங்கள்கிழமை நடைபெற்ற பருத்தி ஏலத்தில் பாப்பிரெட்டிப்பட்டி, பொம்மிடி, கடத்தூா், கம்பைநல்லூா், அரூா், மொரப்பூா், தீா்த்தமலை, கோட்டப்பட்டி உள்ளிட்ட சுற்று வட்டாரப் பகுதிகளைச் சோ்ந்த விவசாயிகள் பலா் சுமாா் 4 ஆயிரம் பருத்தி மூட்டைகளை ஏலத்துக்கு எடுத்து வந்திருந்தனா்.

இதில், ஆா்.சி.எச் ரக பருத்தி குவிண்டால் ஒன்றுக்கு ரூ. 9,499 முதல் ரூ.11,499 வரையிலும் ஏலம் போனது. ரூ. 1.34 கோடி மதிப்பிலான பருத்தி மூட்டைகள் ஏலம் விடப்பட்டதாக கூட்டுறவு சங்க அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com