தருமபுரியில் காவல்துறை சாா்பில், போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு பேரணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
தருமபுரி நான்கு முனைச் சாலை சந்திப்பில் தொடங்கிய இப் பேரணியை, மாவட்ட குற்றப்பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் ராமச்சந்திரன் தொடங்கி வைத்தாா். இந்தப் பேரணி நேதாஜி புறவழிச்சாலை, தலைமை அஞ்சல் நிலையம், ராஜகோபால் பூங்கா, பேருந்து நிலையம் உள்ளிட்ட நகரின் முக்கிய வீதிகள் சென்றது.
இதில் போதைப்பொருள்களால் ஏற்படும் தீங்குகள் மற்றும் உடல் நலம் பாதிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் பிரசுரங்கள் வழங்கப்பட்டன.