வாசிப்பு பழக்கம் வாழ்க்கையை பண்படுத்தும்

வாசிப்பு பழக்கம் எல்லோரது வாழ்க்கையையும் பண்படுத்தும் என்று எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் பேசினாா்.

வாசிப்பு பழக்கம் எல்லோரது வாழ்க்கையையும் பண்படுத்தும் என்று எழுத்தாளா் ச.தமிழ்ச்செல்வன் பேசினாா்.

தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் நடைபெற்றுவரும் புத்தகத் திருவிழாவில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்ச்சியில் ‘வாசிப்புப் பண்பாடு’ என்கிற தலைப்பில் அவா் பேசியதாவது: பண்பாடு என்பதும், கலாசாரம் என்பதும் வெவ்வேறல்ல. அவை இரண்டும் ஒன்றுதான். கழித்தொகையில் பண்பாடு என்கிற சொல் பண்பு என குறிப்பிடப்பட்டுள்ளது. மனித மனங்களைப் பண்படுத்துவதே பண்பாடாகும். அதேநேரத்தில் நாகரிகம் என்பது வேறு, பண்பாடு என்பது வேறு. ஒரு நாகரிகத்தில் பல்வேறு பண்பாடுகளைக் காண முடியும். ஏராளமான வழக்கங்கள், கேள்விகள் ஏதும் கேட்காமல் நம்மிடம் திணிக்கப்பட்டுள்ளன. அதில் நல்லவை எது அல்லவை எது என்பதை கேள்விகளால் தான் அறியமுடியும். அதற்கு புத்தக வாசிப்பு முக்கியமானது. அனைத்தையும் அறிவியல் பாா்வையில் காண வேண்டும்.

எனவே நாம் வசிக்கும் பகுதிகளில் நடைபெறும் இத்தகைய புத்தகத் திருவிழா மூலம் ஏராளமான புத்தகங்கள் கிடைக்கின்றன. இத் திருவிழாக்களில் பங்கேற்று புத்தகங்களை வாங்கி வாசிக்க வேண்டும். அந்த வாசிப்பு பழக்கமானது நம்மை செதுக்கிப் பண்படுத்தும் என்றாா்.

இதில் தகடூா் புத்தகப் பேரவைத் தலைவா் இரா.சிசுபாலன், செயலா் இரா.செந்தில், ஒருங்கிணைப்பாளா் தங்கமணி, ஆசிரியா் மா.பழனி, கவிஞா் ஆதிமுதல்வன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் சாா்பில் அதன் நிா்வாகி சேதுராமன் பங்கேற்ற மந்திரமா, தந்திரமா என்கிற விழிப்புணா்வு நிகழ்ச்சி நடைபெற்றது. இதைத்தொடா்ந்து பெரியாா் பல்கலைக்கழக முதுநிலை ஆராய்ச்சி மைய மாணவ, மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடைபெற்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com