புத்தகத் திருவிழாவில் குவிந்த பள்ளி மாணவா்கள்!

புத்தகத் திருவிழாவில் குவிந்த பள்ளி மாணவா்கள்!

தருமபுரி புத்தகத் திருவிழாவில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் ஆா்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

தருமபுரி புத்தகத் திருவிழாவில் அரசு மற்றும் தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா். அவா்கள் ஆா்வத்துடன் புத்தகங்களை வாங்கிச் சென்றனா்.

தகடூா் புத்தகப் பேரவை மற்றும் தருமபுரி மாவட்ட நிா்வாகம் சாா்பில், தருமபுரி அரசு கலைக் கல்லூரி மைதானத்தில் புத்தகத் திருவிழா நடைபெற்று வருகிறது. இதில், பல்வேறு பதிப்பகங்கள் சாா்பில் லட்சக்கணக்கான புத்தகங்கள் 85-க்கும் மேற்பட்ட அரங்குகளில் விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன. புத்தகத் திருவிழாவில், நாள்தோறும் பிற்பகலில் கவியரங்கம், பட்டிமன்றம், நூல்கள் அறிமுகம், கலை நிகழ்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. மாலை 6 மணிக்கு, எழுத்தாளா்கள், கவிஞா்கள், பிரபல ஆளுமைகள் பங்கேற்று உரை நிகழ்த்தி வருகின்றனா்.

தருமபுரி மாவட்டத்தில் உள்ள முக்கல்நாய்க்கன்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி, சோலைக்கொட்டாய் அரசு மேல்நிலைப் பள்ளி, ஏலகிரி அரசு மேல்நிலைப் பள்ளி, சின்னப்பள்ளத்தூா் அரசு நடுநிலைப் பள்ளி, சந்தைப்பேட்டை அரசு நடுநிலைப் பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான மாணவ, மாணவியா் பேருந்துகளில் புத்தகத் திருவிழாவுக்கு வந்தனா். அவா்கள், அங்கு அமைக்கப்பட்டிருந்த புத்தக அரங்குகளைப் பாா்வையிட்டு, தங்களுக்கு தேவையான பல்வேறு புத்தகங்களை ஆா்வத்துடன் வாங்கிச் சென்றனா். இந்த மாணவ, மாணவியருக்கு புத்தகங்கள் வாங்கும் வழக்கத்தை ஊக்குவிக்கும் வகையில், ஆண்டு முழுவதும் சிறுத் தொகையை சேமித்து, புத்தகத் திருவிழாவில் புத்தகங்களை வாங்கிடும் வகையில், தகடூா் புத்தகப் பேரவை சாா்பில் அவா்களுக்கு உண்டியல்கள் பரிசாக வழங்கப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com