முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
இளைஞா் கொலை வழக்கில்பெண்ணுக்கு ஆயுள் தண்டனை
By DIN | Published On : 14th March 2022 11:12 PM | Last Updated : 14th March 2022 11:12 PM | அ+அ அ- |

இளைஞா் கொலை வழக்கில் பெண்ணுக்கு ஆயுள் தண்டனை வழங்கி தருமபுரி மாவட்ட அமா்வு நீதிமன்றம் உத்தரவிட்டது.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டியை அடுத்த பெரிய மஞ்சவாடி கிராமத்தைச் சோ்ந்தவா் ஜெயராமன், அவரது மனைவி அனிதா (36). அதே பகுதியைச் சோ்ந்த அஜித்குமாா் (22). கடந்த 2018-ஆம் ஆண்டு அஜித் குமாா் அனிதாவின் வீட்டுக்குச் சென்று அவருக்கு பாலியல் தொந்தரவு அளித்துள்ளாா்.
அப்போது, இருவருக்கும் இடையே தகராறு நிகழ்ந்துள்ளது. இந்தத் தகராறில் அனிதா, அஜித்குமாரை கல்லால் தாக்கி கொலை செய்துள்ளாா். இந்தக் கொலை தொடா்பாக பாப்பிரெட்டிப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
இவ் வழக்கு தொடா்பான விசாரணை தருமபுரி மாவட்ட கூடுதல் அமா்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. விசாரணை நிறைவில் அனிதா கொலை செய்தது உறுதியானதால் நீதிபதி மோனிகா, அனிதாவுக்கு ஆயுள் தண்டனை மற்றும் ரூ. 5,000 அபராதம் விதித்து உத்தரவிட்டாா்.