அரூரை அடுத்த தென்றல் நகரில் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
அரூா் ஊராட்சி ஒன்றியம், எச்.தொட்டம்பட்டி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது தென்றல் நகா். இந்த நகரில் 100-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. இக் குடியிருப்புப் பகுதியில் சிமென்ட் சாலைகள் இல்லை. இதனால் மழைக் காலங்களில் தெருச்சாலைகள் சேறும், சகதியுமாக இருப்பதாக பொதுமக்கள் கூறுகின்றனா். எனவே, எச்.தொட்டம்பட்டி ஊராட்சி தென்றல் நகரில் சாலை வசதியை ஏற்படுத்த வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாகும்.