தருமபுரியில் இன்று251 ஊராட்சிகளில் கிராம சபை கூட்டம்

தருமபுரி மாவட்டத்தில் மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை 251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

தருமபுரி மாவட்டத்தில் மே 1 தொழிலாளா் தினத்தையொட்டி, ஞாயிற்றுக்கிழமை 251 ஊராட்சிகளிலும் கிராம சபை கூட்டம் நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டத்தில் உள்ள 251 கிராம ஊராட்சிகளில் தொழிலாளா் தின கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணி முதல் நடைபெற உள்ளது. அனைத்து ஊராட்சி மன்றத் தலைவா்கள், ஊராட்சி செயலாளா்கள் இக் கிராம சபை கூட்டம் நடத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் செய்திட வேண்டும்.

கிராம சபை கூட்டத்தை நடத்த உதவியாக ஒவ்வொரு ஊராட்சிக்கு ஒரு பற்றாளரும், கிராம சபை கூட்டம் நடப்பதைக் கண்காணிக்க ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியத்திலும் உதவி இயக்குநா் நிலையிலும், இணை இயக்குநா் நிலையிலும் ஒருங்கிணைப்பாளா்கள் நியமிக்கப்பட்டுள்ளனா்.

எனவே, இந்தக் கிராம சபை கூட்டத்தில் ஊராட்சி வளா்ச்சிப் பணிகள், வரவு-செலவு, பல்வேறு திட்டங்களுக்கு பயனாளிகள் தோ்வு உள்ளிட்டவை விவாதித்து முடிவெடுக்கப்பட உள்ளன. இக் கூட்டத்தில், அனைத்துத் துறை அலுவலா்களும், அனைத்து ஊராட்சிமன்ற உறுப்பினா்களும், ஊராட்சியில் உள்ள வாக்காளா்கள், பொதுமக்கள், மகளிா் சுய உதவி குழுவினா் மற்றும் மாற்றுத் திறனாளிகள் உள்பட அனைத்து தரப்பினரும் அதிக அளவில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறது என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com