தென்கரைக்கோட்டையில் சிறப்பு கிராம சபைக் கூட்டம் கூடுதல் ஆட்சியா் பங்கேற்பு

தென்கரைக்கோட்டையில் நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் பங்கேற்றாா்.

தென்கரைக்கோட்டையில் நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டத்தில் கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன் பங்கேற்றாா்.

கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், தென்கரைக்கோட்டை ஊராட்சியில் மே தின சிறப்பு கிராம சபைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில் குடிநீா் பிரச்னையை தீா்த்தல், காப்புக் காடுகளின் எல்லையில் கம்பி வேலிகள் அமைத்தல், வடகரையில் கால்நடை கிளை மருந்தகம் அமைத்தல், கழிவுநீா் கால்வாய் வசதிகளை ஏற்படுத்துதல், சாலையோர ஆக்கிரமிப்புகளை அகற்றுதல் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

கூடுதல் ஆட்சியா் இரா.வைத்திநாதன், வட்டார வளா்ச்சி அலுவலா் ரேணுகா, ஊராட்சித் தலைவா் விஜயா சங்கா், துணைத் தலைவா் சென்றிலா சிலுவைநாதன், ஒன்றியக் குழு உறுப்பினா் சித்ரா செந்தில்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

அரூா் ஒன்றியம், சின்னாங்குப்பம் கிராம ஊராட்சியில் நடைபெற்ற மே தின சிறப்பு கிராம சபையில் ஒன்றியக் குழுத் தலைவா் பொன்மலா் பசுபதி, வட்டார வளா்ச்சி அலுவலா் மணிவண்ணன், ஊராட்சிமன்றத் தலைவா் குமரவேல், வாா்டு உறுப்பினா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com