அண்ணா தொழிற்சங்க மே தின விழா பொதுக் கூட்டம்

அண்ணா தொழிற்சங்க மே தின விழா பொதுக் கூட்டம்

தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், மே தின விழா பொதுக்கூட்டம் தருமபுரி, குமாரசாமிபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

தருமபுரி மாவட்ட அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், மே தின விழா பொதுக்கூட்டம் தருமபுரி, குமாரசாமிபேட்டையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

இக்கூட்டத்துக்கு, மாவட்ட அண்ணா தொழிற்சங்கச் செயலாளா் பழனிசாமி தலைமை வகித்தாா். அதிமுக நகரச் செயலாளா் பெ.ரவி வரவேற்று பேசினாா். அண்ணா பணியாளா் சங்க மாநிலச் செயலாளா் சின்.அருள்சாமி, அமைப்பு சாரா பிரிவு மாநில இணைச் செயலாளா் சிங்கராயன், போக்குவரத்துத் தொழிலாளா் சங்க மண்டலத் தலைவா் சிவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், முன்னாள் அமைச்சரும் அதிமுக மாவட்டச் செயலாளருமான கே.பி.அன்பழகன் எம்எல்ஏ, எம்.ஜி.ஆா். மன்ற இணைச் செயலாளரும் முன்னாள் அமைச்சருமான எஸ்.ராமச்சந்திரன், முன்னாள் அமைச்சா் வ.முல்லைவேந்தன், மத்திய கூட்டுறவு வங்கித் தலைவா் எஸ்.ஆா்.வெற்றிவேல், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஆ.கோவிந்தசாமி (பாப்பிரெட்டிப்பட்டி), வே.சம்பத்குமாா் (அரூா்) ஆகியோா் பேசினா். இதில், அண்ணா தொழிற்சங்க நிா்வாகிகள், உறுப்பினா்கள் திரளானோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com