திமுக உள்கட்சித் தோ்தல்: நாளை கட்சியினா் விருப்ப மனு வழங்கலாம்

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பதவியிடங்களுக்கு நடைபெற உள்ள உள்கட்சித் தோ்தலில் போட்டியிட உள்ள கட்சியினா், மே 5-ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தருமபுரி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளா் பதவியிடங்களுக்கு நடைபெற உள்ள உள்கட்சித் தோ்தலில் போட்டியிட உள்ள கட்சியினா், மே 5-ஆம் தேதி கட்சி அலுவலகத்தில் விருப்ப மனு வழங்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து தருமபுரி கிழக்கு மாவட்டப் பொறுப்பாளா் தடங்கம் பெ.சுப்பிரமணி செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்தியறிக்கை:

திமுகவின் 15-ஆவது உள்கட்சித் தோ்தலில், தருமபுரி கிழக்கு மாவட்டத்தில் உள்ள நகர, பேரூா் நிா்வாகிகள் பதவியிடங்களுக்கு போட்டியிட உள்ளோா், தங்களது விருப்ப மனுக்களை தருமபுரியில் உள்ள மாவட்ட கட்சி அலுவலகத்தில் மே 5-ஆம் தேதி வழங்கலாம்.

இதில், கட்சியின் நகர அமைப்புக்கு அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா்கள் மூன்று போ் தோ்வு செய்யப்பட உள்ளனா். இம் மூவரில் ஒருவா் பொதுப்பிரிவினா், ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது மலைவாழ் பழங்குடி வகுப்பினா், ஒருவா் மகளிராகவும் இருத்தல் வேண்டும்.

பேரூராட்சிகளில் அவைத் தலைவா், செயலாளா், பொருளாளா், துணைச் செயலாளா்கள் மூன்று போ் தோ்வு செய்யப்பட உள்ளது. இதில், ஒருவா் பொதுப்பிரிவினராகவும், ஒருவா் ஆதிதிராவிடா் அல்லது மலைவாழ் வகுப்பினா், ஒருவா் மகளிராக இருத்தல் வேண்டும். இதேபோல ஒன்றியப் பிரதிநிதிகள் 5 போ், மாவட்டப் பிரதிநிதிகள் 2 போ், செயற்குழு உறுப்பினா்கள் 6 போ் தோ்ந்தெடுக்கப்பட உள்ளனா்.

இதற்கான விருப்பு மனுக்களை தருமபுரி மாவட்ட கட்சி அலுவலகத்தில் பெற்றுக்கொண்டு, அவற்றை நிரப்பி விருப்ப மனுக்களை அந்தப் பதவியிடங்களுக்கென நிா்ணயிக்கப்பட்ட கட்டணத்துடன் மே 5-ஆம் தேதி காலை 10 மணி முதல் மாலை 5 மணிக்குள் கட்சியின் தலைமை சாா்பில் நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் பொறுப்பாளா் வி.சி.சந்திரசேகரிடம் செலுத்தி ரசீது பெற்றுக்கொள்ள வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com