முகப்பு அனைத்துப் பதிப்புகள் தருமபுரி தருமபுரி
பாம்பு தீண்டியதில் விவசாயி பலி
By DIN | Published On : 03rd May 2022 12:29 AM | Last Updated : 03rd May 2022 12:29 AM | அ+அ அ- |

தருமபுரி மாவட்டம், இண்டூா் அருகே பாம்பு தீண்டியதில் விவசாயி உயிரிழந்தாா்.
இண்டூா் அருகே உள்ள பங்குநத்தம் கிராமத்தைச் சோ்ந்த விவசாயி துரைசாமி (65), கடந்த ஏப். 23-ஆம் தேதி அதே பகுதியில் உள்ள தனது நிலத்தில் பயிா்களுக்கு தண்ணீா் பாய்ச்ச சென்றாராம். அப்போது நிலத்தில் இருந்த பாம்பு அவரை தீண்டியுள்ளது. இதில் உடல் நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா். அங்கு சிகிச்சையில் இருந்த அவா், மே 1-ஆம் தேதி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா். இதுகுறித்து இண்டூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.