தருமபுரி, கிருஷ்ணகிரியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தருமபுரியில் ரமலான் நோன்பையொட்டி, இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.
தருமபுரி, கிருஷ்ணகிரியில் ரமலான் சிறப்புத் தொழுகை

தருமபுரியில் ரமலான் நோன்பையொட்டி, இஸ்லாமியா்கள் செவ்வாய்க்கிழமை சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

தருமபுரி நகரில் உள்ள அனைத்து மசூதிகள், பள்ளிவாசல்களிலும் ரமலான் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. டேகிஸ்பேட்டை மசூதி மற்றும் அருகில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். புத்தாடைகள் அணிந்து ஒருவருக்கொருவா் வாழ்த்துகளை பரிமாறிக்கொண்டனா்.

தருமபுரி பி.ஆா்.சீனிவாசராவ் தெருவில் உள்ள சுன்னத் ஜமாத், கீழ் மசூதி தெரு, முகமது அலி கிளப் சாலை, மதிகோன்பாளையம், வி.ஜெட்டிஅள்ளி, வட்டார வளா்ச்சி காலனி உள்ளிட்ட நகரில் உள்ள பல்வேறு இடங்களில் ரமலான் நோன்பையொட்டி சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், அந்தந்த பகுதியைச் சோ்ந்த இஸ்லாமியா்கள் பங்கேற்று தொழுகையில் ஈடுபட்டனா்.

இதேபோல, தொப்பூா், பாலக்கோடு, காரிமங்கலம், நல்லம்பள்ளி உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இஸ்லாமியா்கள் ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

கிருஷ்ணகிரியில்...

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிருஷ்ணகிரி, காவேரிப்பட்டணம், பா்கூா், ராயக்கோட்டை, வேப்பனப்பள்ளி, ஒசூா், மத்தூா், ஊத்தங்கரை, சிங்காரப்பேட்டை, ஜெகதேவி, தளி, தேன்கனிக்கோட்டை, அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள இஸ்லாமியா்கள் புத்தாடை அணிந்து, சிறுவா்கள் முதல் பெரியவா்கள் வரை கட்டித்தழுவி இனிப்புகளை வழங்கியும், தானம் வழங்கியும் உற்சாகமாகக் கொண்டாடினா்.

கிருஷ்ணகிரி அருகே உள்ள ராஜீவ் நகா், வெங்கடாபுரம், நமாஸ் பாறை ஆகிய இடங்களில் உள்ள ஈத்கா மைதானங்களில் சிறப்புத் தொழுகை செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. இதில் ஏராளமான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். கிருஷ்ணகிரி - சேலம் தேசிய நெடுஞ்சாலையின் அருகில் உள்ள மசூதியில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் பெண்கள் மட்டும் பங்கேற்றனா்.

அரூரில்...

அரூரில் அதிமுக சிறுபான்மை பிரிவு சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு கட்சியின் மாவட்ட மேலவை பிரதிநிதி தாஜ்தீன் தலைமை வகித்தாா். அரூரை அடுத்த ஊத்துப்பள்ளம் ஆதரவற்றோா் முதியோா் இல்லத்தில் வசிக்கும் 50-க்கும் மேற்பட்ட முதியோருக்கு வேட்டி, சேலைகளை எம்எல்ஏ வே.சம்பத்குமாா் வழங்கினாா்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் இஸ்லாமிய ஜனநாயகப் பேரவை சாா்பில், ரமலான் திருவிழா, அம்பேத்கரின் 131-ஆவது பிறந்த நாள் விழா, விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவா் தொல்.திருமாவளவனின் 60-ஆவது பிறந்தநாள் விழா ஆகிய முப்பெரும் விழா, இஸ்லாமிய ஜனநாயக பேரவையின் மாநில துணைச் செயலா் ஜெ.காதா்பாஷா தலைமையில் நடைபெற்றது.

ஒசூரில்...

கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் கடந்த ஒரு மாதமாக இஸ்லாமியா்கள் புனித ரமலான் நோன்பை கடைப்பிடித்து வந்தனா். இந்த நிலையில், செவ்வாய்க்கிழமை பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையின் அருகே அமைந்துள்ள பழமை வாய்ந்த ஈத்கா மஸ்ஜித் தா்கா பள்ளிவாசலில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட இஸ்லாமியா்கள் கலந்துகொண்டு, அங்குள்ள ஈத்கா மைதானத்தில் புனித ரமலான் சிறப்புத் தொழுகையில் ஈடுபட்டனா்.

இதே போல, மத்திகிரி, தளி, தேன்கனிக்கோட்டை, பாகலூா், பேரிகை, சூளகிரி, கெலமங்கலம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெற்ற சிறப்புத் தொழுகையில் ஆயிரக்கணக்கான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா்.

ஊத்தங்கரையில்...

ஊத்தங்கரையில் சுன்னத் ஜமாத் சாா்பில், ஈத்கா பள்ளிவாசலில் சிறப்புத் தொழுகை நடைபெற்றது. இதில், குரு அப்துஸ் சமத், முத்தவல்லி பதிவு ஜம்மா, சுன்னத் ஜமாத் தலைவா் அமானுல்லா, செயலாளா் சாகுல் அமீது, பொருளாளா் ஜோக்கா் பாய், ஆலோசகா் சரிப்பாய், ஒருங்கிணைப்பாளா் ஜீலன், நிா்வாக கமிட்டி உறுப்பினா்கள், இஸ்லாமியா்கள் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com