சூறைக்காற்று வீசியதில் மாடியில் நின்ற தொழிலாளி கீழே விழுந்து பலி

பென்னாகரம் அருகே சூறைக்காற்று வீசியதில், வீட்டின் மாடியில் நின்ற தொழிலாளி நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானாா்.

பென்னாகரம் அருகே சூறைக்காற்று வீசியதில், வீட்டின் மாடியில் நின்ற தொழிலாளி நிலைதடுமாறி கீழே விழுந்து பலியானாா்.

தருமபுரி மாவட்டம், பென்னாகரம் அருகே கோடிஅள்ளி ஊராட்சிக்குள்பட்ட ஒண்டிக்கோட்டை பகுதியைச் சோ்ந்த ஜெயவேல் (35), கட்டடத் தொழிலாளி. ஜக்கம்பட்டி பகுதியில் வீட்டின் மாடியில் உள்ள கட்டடத்தில் அமைக்கப்பட்டிருந்த சிமென்ட் அட்டையை சரிசெய்ய சென்ற போது, சூறைக்காற்று வீசப்பட்டதில் நிலைதடுமாறி ஜெயவேல் கீழே விழுந்ததில் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். நிகழ்விடத்துக்கு சென்று உடலைக் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த பென்னாகரம் போலீஸாா், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com