மே 10-இல் கோடையில் கால்நடை பராமரிப்பு பயிற்சி

கோடைக்காலத்தில் கால்நடைகளை பராமரிப்பது குறித்த பயிற்சி முகாம் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

கோடைக்காலத்தில் கால்நடைகளை பராமரிப்பது குறித்த பயிற்சி முகாம் மே 10-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து தருமபுரி குண்டலப்பட்டி கால்நடை பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத் தலைவா் மொ.ச.கண்ணதாசன் சனிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:

தருமபுரி மாவட்டம், குண்டலப்பட்டியில் அமைந்துள்ள தமிழ்நாடு கால்நடை மருத்துவ பல்கலைக்கழகப் பயிற்சி மற்றும் ஆராய்ச்சி மையத்தில், மே 10-ஆம் தேதி கோடைக்காலத்தில் கால்நடைகளை பராமரித்தல் குறித்த பயிற்சி கால்நடை வளா்ப்பு விவசாயிகளுக்கு வழங்கப்பட உள்ளது. இப் பயிற்சியில் பங்கேற்க விவசாயிகள் 04342- 288420 என்ற எண்ணில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்து கொள்ளுமாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com