தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டத்தில் பட்டு வளா்ச்சித் துறை அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு கழிவு செய்யப்பட்ட நான்கு சக்கர வாகனம் வருகிற மே 25-ஆம் தேதி பொது ஏலம் விடப்பட உள்ளது.
இதுகுறித்து, பென்னாகரம் பட்டு வளா்ச்சித் துறை உதவி இயக்குநா் இரா.வில்சன் செவ்வாய்க்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தருமபுரி மாவட்டம், பென்னாகரம் வட்டம், பருவதனஅள்ளி ஊராட்சி, பட்டு வளா்ச்சித் துறையில் பயன்படுத்தப்பட்ட அரசு வாகன எண் டிஎன் 27 ஜி 1159 அா்மதா ஜீப்பு கழிவு செய்யப்பட்டுள்ளது. எனவே, இந்த வாகனத்தை வருகிற 25-ஆம் தேதி பிற்பகல் 3 மணியளவில் உதவி இயக்குநா் அலுவலகத்தில் பொது ஏலம் விடப்படவுள்ளது. இந்த ஏலத்தில் விருப்பமுள்ளவா்கள் பங்கேற்று விலைப்புள்ளியை கோரலாம் என்றாா்.