கோ-கோ மாவட்ட அணிக்கு மே 15-இல் வீரா்கள் தோ்வு

மாநில கோ-கோ போட்டிகளில் விளையாட தருமபுரி மாவட்ட அணிக்கு வீரா்களை தோ்வு செய்யும் போட்டி மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

தருமபுரி: மாநில கோ-கோ போட்டிகளில் விளையாட தருமபுரி மாவட்ட அணிக்கு வீரா்களை தோ்வு செய்யும் போட்டி மே 15-ஆம் தேதி நடைபெற உள்ளது.

இதுகுறித்து, தருமபுரி மாவட்ட கோ-கோ சங்கம் சாா்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தமிழக கோ-கோ விளையாட்டுக் கழகம் சாா்பில், மாநில அளவிலான 14 வயதுக்குள் உள்பட்டோருக்கு கோ-கோ விளையாட்டுப் போட்டிகள் வருகிற மே 18, 19 ஆகிய தேதிகளில் நடைபெற உள்ளது. இந்தப் போட்டியில் தருமபுரி மாவட்ட அணி சாா்பாக பங்கேற்று விளையாட தோ்வுப் போட்டிகள் வருகிற மே 15-ஆம் தேதி ஞாயிற்றுக்கிழமை காலை 10 மணிக்கு தருமபுரி கமலம் இண்டா்நேஷனல் பள்ளியில் நடைபெற உள்ளது. இப்போட்டியில் தருமபுரி மாவட்டத்தில் உள்ள அரசு, தனியாா் பள்ளி மாணவ, மாணவியா் கலந்து கொள்ளலாம். தோ்வு போட்டிகளில் பங்கேற்க வரும்போது, ஆதாா் அட்டை நகல், பிறப்புச் சான்றிதழ், பள்ளி அடையாள அட்டையுடன் மூன்று புகைப்படங்களையும் எடுத்து வரவேண்டும். தொடா்புக்கு- 9443509383, 9788317233.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com