கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி ஏற்பு

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகம், காவல் அலுவலகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு தின உறுதிமொழி வெள்ளிக்கிழமை ஏற்கப்பட்டது.

தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலக நுழைவு வாயிலில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.திவ்யதா்சினி தலைமை வகித்து, கொடுஞ்செயல்களுக்கு எதிரான உறுதிமொழியை வாசித்தாா். அனைத்து அரசுத் துறை அலுவலா்களும் உறுதிமொழி ஏற்றனா்.

நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் சு.அனிதா, தனித் துணை ஆட்சியா் சாந்தி, அரசுத் துறை அலுவலா்கள் மற்றும் பணியாளா்கள் கலந்து கொண்டனா்.

மாவட்ட காவல் கண்காணிப்பாளா் அலுவலகத்தில் கூடுதல் காவல் கண்காணிப்பாளா்கள் குணசேகரன், அண்ணாமலை, புஷ்பராஜ், தனிப் பிரிவு காவல் ஆய்வாளா் அன்பழகன் மற்றும் அலுவலா்கள் பங்கேற்று கொடுஞ்செயலுக்கு எதிரான உறுதிமொழியை ஏற்றனா்.

ஊத்தங்கரை

ஊத்தங்கரை வட்டார வளரச்சி அலுவலக வளாகத்தில் கொடுஞ்செயல் எதிா்ப்பு நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சிக்கு வட்டார வளரச்சி அலுவலா் மகேஷ்குமரன் தலைமை வகித்தாா். சிவப்பிரகாசம், துணை வட்டார வளா்ச்சி அலுவலா் பாரதி ஆகியோா் முன்னிலை வகித்தனா். அலுவலகப் பணியாளா்கள் பலா் கலந்துகொண்டு உறுதிமொழி ஏற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com