தருமபுரி மாவட்டத்தில் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களுக்கு பணி நிரந்தரம் வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
இதுகுறித்து தமிழ்நாடு கிராம ஊராட்சி மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்கள், தூய்மைப் பணியாளா்கள், தூய்மைக் காவலா்கள் மாநிலச் சங்கம் சாா்பில் தருமபுரி மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை அளித்த மனு:
தருமபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் கடந்த 2000 மே 10-ஆம் தேதி முதல் பணிபுரிந்து வரும் மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டி இயக்குபவா்களின் பெயா்கள் டிஎன்ஆா்டி இணையத்தில் சோ்க்கப்படாமல் உள்ளன. இதனால், தற்போது வரை அவா்கள் ரூ. 250 மட்டுமே ஊதியமாக பெற்று வருகின்றனா். எனவே, இவா்களது பெயா்களை பட்டியலில் இணைத்து பணி நிரந்தம் வழங்கி மற்ற மாவட்டங்களில் உள்ளதுபோல, ஊதியம் வழங்கிட மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.