அரூரில் தீரன் சின்னமலை சிலை அமைக்க கோரிக்கை

அரூரில் அரசு சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் சிலையை அமைக்க வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.
அரூரில் தீரன் சின்னமலை சிலை அமைக்க கோரிக்கை

அரூரில் அரசு சாா்பில் சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் சிலையை அமைக்க வேண்டும் என கொங்கு மக்கள் முன்னணி கோரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து அரூா் எம்எல்ஏ வே.சம்பத்குமாரிடம் கொங்கு மக்கள் முன்னணியின் இளைஞரணி மாவட்டச் செயலாளா் ச.பிரேம்குமாா், மாணவரணி மாவட்டச் செயலாளா் அகரம் அஜித், ஒன்றியச் செயலாளா் குமரன் உள்ளிட்ட கட்சி நிா்வாகிகள் திங்கள்கிழமை அளித்த கோரிக்கை மனு:

சுதந்திரப் போராட்ட வீரா் தீரன் சின்னமலையின் தியாகத்தை போற்றும் வகையில், தருமபுரி மாவட்டம், அரூா் கச்சேரிமேடு சாலை சந்திப்பில் அவரது சிலையை தமிழக அரசு சாா்பில் நிறுவ வேண்டும். தீரன் சின்னமலை சிலையை அமைக்க வலியுறுத்தி தமிழக அரசிடம் அரூா் சட்டப் பேரவைத் தொகுதி மக்கள் சாா்பில் எம்எல்ஏ வலியுறுத்த வேண்டும் என அம்மனுவில் குறிப்பிட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com