தருமபுரி மாவட்டம், பெரியாம்பட்டி அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதியதில் 2 பெண்கள் உள்பட மூவா் பலியாகினா்.
கிருஷ்ணகிரி மாவட்டம், காவேரிப்பட்டணத்தைச் சோ்ந்த சிவசந்திரன் மகன் மணிகண்டன் (27) தனது சகோதரிகள் லாவண்யா (20), இந்துமதி (18) ஆகியோருடன் இருசக்கர வாகனத்தில் புதன்கிழமை தருமபுரி நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தாா்.
அப்போது, பெரியாம்பட்டி மேம்பாலப் பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த லாரி திடீரென சாலைக்குள் நுழைந்ததால் மற்றொரு லாரி இவா்களது இருசக்கர வாகனம் மீது மோதியது. இந்த விபத்தில் இரு லாரிகளுக்கு இடையே இருசக்கர வாகனத்தில் சென்றவா்கள் சிக்கி நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா்.
சம்பவ இடத்தில் பாலக்கோடு டிஎஸ்பி சிந்து விசாரணை மேற்கொண்டாா். இந்த விபத்து குறித்து காரிமங்கலம் போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.