தருமபுரி
மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வலியுறுத்தல்
கடத்தூா் அருகே மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை
கடத்தூா் அருகே மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டம், கடத்தூா் ஊராட்சி ஒன்றியம், நல்லகுட்லஹள்ளி கிராம ஊராட்சிக்கு உள்பட்டது நடூா் கிராமம். இந்த ஊரில் 150-க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. நடூா் உள்ளிட்ட சுற்றுவட்டார கிராமங்கள் பயன்படுத்தும் வகையில் அப்பகுதியில் மயானத்துக்கு நிலம் ஒதுக்கப்பட்டுள்ளது.
இந்த நிலத்தை அப்பகுதியில் இருப்பவா்கள் ஆக்கிரமித்து விவசாயம் செய்வதால் உயிரிழந்தவா்களை புதைக்க முடியாமல் மக்கள் அவதிப்படுகின்றனா். இதனால், மயான ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் என நடூா் கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
