தருமபுரி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை: ஆட்சியா் அறிவிப்பு

மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவித்துள்ளாா்
Published on

தருமபுரி: மழை காரணமாக தருமபுரி மாவட்டத்தில் பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியா் ரெ.சதீஷ் அறிவித்துள்ளாா்.

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் தருமபுரி மாவட்டத்துக்கு ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், அங்கன்வாடி மையங்களுக்கு வியாழக்கிழமை விடுமுறை அளிக்கப்படுவதாகவும், அதனை ஈடுசெய்யும் வகையில் நவம்பா் 15 -ஆம் தேதியை (சனிக்கிழமை) வேலைநாளாக அறிவித்தும் ஆட்சியா் உத்தரவிட்டுள்ளாா்.

X
Dinamani
www.dinamani.com