ஒசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, முன்மாதிரி மருத்துவமனையாக உருவாக்குவது குறித்த ஆய்வு சனிக்கிழமை நடைபெற்றது.
ஒசூர் அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு தரமான சிகிச்சை அளிப்பதை உறுதி செய்யும் வகையில் தில்லியில் உள்ள என்.ஏ.பி.எச். என்ற அமைப்பு சார்பில் மருத்துவமனைக்கு தேசிய தரச் சான்று வழங்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், ஒசூர் அரசு மருத்துவமனையை தரம் உயர்த்தி, முன்மாதிரி மருத்துவமனையாக உருவாக்குவது குறித்த ஆய்வு மத்திய சுகாதாரத் திட்ட இயக்குநர் பூஷன், தமிழக சுகாதார இயக்குநர் குழந்தைவேலு, கிருஷ்ணகிரி மாவட்ட இணை இயக்குநர் அசோக்குமார் ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
தொடர்ந்து ஒசூர் அரசு மருத்துவமனையில் ஆய்வு செய்த குழுவினர், ஒசூர் சிப்காட் பகுதியில் உள்ள தொற்றுநோய் ஆராய்ச்சி மையத்தையும் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில், போக்குவரத்து காவல் நிலையத்திற்கு பின்புறம் செயல்படாமல் உள்ள அவசரச் சிகிச்சை மையத்தைப் பார்வையிட்டனர். அப்போது, அந்தக் குழுவிடம் இந்த மையத்தை மேம்படுத்த வேண்டும் என மருத்துவ அலுவலர் பொன்ராஜ் கோரிக்கை விடுத்தார்.