தீக்குளித்து பெண் தற்கொலை

சூளகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கிரிஜம்மா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே
Published on
Updated on
1 min read

சூளகிரி அருகே பெண் தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
சூளகிரி அருகே உள்ள சென்னப்பள்ளியைச் சேர்ந்தவர் ரமேஷ் மனைவி கிரிஜம்மா (32). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர். கணவன்-மனைவி இடையே அடிக்கடி கருத்து வேறுபாடு ஏற்பட்டு வந்ததால் மனமுடைந்த கிரிஜா உடலில் மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்துக் கொண்டாராம்.
இதில் உடல் கருகிய அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பிறகு மேல்சிகிச்சைக்காக பெங்களூரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி வியாழக்கிழமை உயிரிழந்தார். இதுகுறித்து சூளகிரி போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com