நிலத்தகராறில் தம்பியை வெட்டிய அண்ணனை போலீஸார் வியாழக்கிழமை கைது செய்தனர்.
மத்தூரை அடுத்த புதுப்பட்டி கிராமத்தைச் சேர்ந்தவர் கிருஷ்ணன் மகன் சாமிநாதன் (55). விவசாயியான இவருக்கும், இவரது அண்ணனுக்கும் சொந்தமாக விவசாய நிலம் உள்ளது. இதில் சாமிநாதனுக்கு சொந்தமான நிலத்தையும் சேர்த்து விவசாயம் செய்ய கோவிந்தன் டிராக்டரில் ஏர் ஓட்டினாராம். இதனைக் கேட்கச் சென்ற சாமிநாதனை அண்ணன் மகன் பெரியசாமி (40) மண்வெட்டியால் இடதுபுற மார்பில் வெட்டினாராம். இதில் படுகாயமடைந்த சாமிநாதனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் சேர்த்தனர். இதுகுறித்து மத்தூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து, கோவிந்தனை கைது செய்தனர். தலைமறைவான பெரியசாமியை தேடி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.