கார் மோதி கல்லூரி மாணவர் சாவு

கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
Updated on
1 min read

கிருஷ்ணகிரி அருகே கார் மோதியதில் பொறியியல் கல்லூரி மாணவர் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தார்.
 நாகனப்பள்ளியைச் சேர்ந்த உலகநாதனின் மகன் அனிஷ்குமார் (21), இவர், சென்னையில் உள்ள ஒரு தனியார் பொறியியல் கல்லூரியில் 2-ஆம் ஆண்டு பயின்று வந்தார். இந்த நிலையில் கிருஷ்ணகிரி அருகே தண்டேகுப்பம் வழியாக தனது இருசக்கர வாகனத்தில் சென்றபோது எதிரே வந்த கார் மோதியதில் பலத்த காயம் அடைந்தார்.
 அவரை அருகில் இருந்தவர்கள் மீட்டு கிருஷ்ணகிரி அரசுத் தலைமை மருத்துவமனைக்கு அனுப்பினர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார். கிருஷ்ணகிரி நகர போலீஸார் வழக்குப் பதிந்துள்ளனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com