ஊத்தங்கரையில் சத்துணவு அமைப்பாளர் பதவிக்கு நேர்முக தேர்வு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் புதன்கிழமை நடைபெற்றது.
ஊரக வளர்ச்சித் துறை நேர்முக உதவியாளர் பாபு, ஊத்தங்கரை வட்டார வளர்ச்சி அலுவலர்கள் அசோகன், ராஜசேகர், கூடுதல் உதவித் தொடக்கக் கல்வி அலுவலர் மகேஸ்வரி, வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள், ஆசிரியர்கள் நேர்முகத் தேர்வில் கலந்து கொண்ட பெண்களின் சான்றிதழ்களை சரிபார்க்கும் பணியில் ஈடுபட்டனர்.
முதல் கட்டமாக ஊராட்சி ஒன்றியத் துவக்கப் பள்ளிகள் கணேசாபுரம், சின்னகுன்னத்தூர், நரிக்கானூர், நாய்க்கனூர், புதுப்பட்டி, பேயனூர், வன்னியர் நகர், கொட்டுக்காரம்பட்டி திருவணப்பட்டி ஆகிய 9 பள்ளிகளுக்கு நேர்முகத் தேர்வு நடைபெற்றது. இதில் 9 பணியிடங்களுக்கு 283 பேர் கலந்து கொண்டனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.