பென்னாகரம் அருகே சாலையில் அமைந்துள்ள மின் கம்பத்தால் வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்தித்து வருகின்றனர்.
பென்னாகரம் அருகே உள்ள பி.கோடுப்பட்டி பகுதியில் சாலையில் உள்ள மின் கம்பத்தால் அடிக்கடி விபத்துகள் ஏற்படுகின்றன. தாசம்பட்டி, கோடுப்பட்டி,மருக்காரம்பட்டி பகுதிகளிலிருந்து விளை பொருள்களை வாகனத்தில் ஏற்றி கொண்டு அதிகாலை, இரவு நேரத்தில் பென்னாகரம் வரும் விவசாயிகள் இந்த கம்பத்தால் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர்.
மின்வாரியம் உரிய நடவடிக்கை மேற்கொண்டு சாலையில் உள்ள கம்பத்தை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.