கிருஷ்ணகிரியில் சனிக்கிழமை நடைபெற்ற தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமில் 482 பேருக்கு பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
கிருஷ்ணகிரி அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம், வேலைவாய்ப்பு அலுவலகம், தமிழ்நாடு ஊரக வாழ்வாதார இயக்கம் ஆகியன இணைந்து தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமை நடத்தின.
இதில் சேலம், கோவை, சென்னை, ஒசூர், கிருஷ்ணகிரி ஆகிய நகரங்களைச் சேர்ந்த 75 தனியார் நிறுவனங்கள் பங்கேற்று, தங்கள் நிறுவனத்துக்கு தகுதியான நபர்களைத் தேர்வு செய்தனர். இந்த முகாமில் 965 பணி நாடுநர்கள் பங்கேற்றனர். இதில் தகுதி வாய்ந்த 482 பேர் தேர்வு செய்யப்பட்டு, அவர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்வில் மகளிர் திட்ட அலுவலர் உமா மகேஸ்வரி, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் கௌரி சங்கர், பள்ளி தலைமை ஆசிரியர் மகேந்திரன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.