மதுப் புட்டிகள் விற்பனை: 7 பேர் கைது

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மதுப் புட்டிகளை விற்பனை செய்ததாக 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.

அரூர் மற்றும் பாப்பிரெட்டிப்பட்டி வட்டாரப் பகுதியில் மதுப் புட்டிகளை விற்பனை செய்ததாக 7 பேரை போலீஸார் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
டாஸ்மாக் மதுப் புட்டிகளை அரசு அனுமதியின்றி வாச்சாத்தி, பேதாதம்பட்டி, மெணசி, பூதநத்தம், வெங்கடசமுத்திரம், கருங்கல்லூர், மொரப்பூர் உள்ளிட்ட இடங்களில் பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்பனை செய்யப்படுவதாக போலீஸாருக்கு புகார்கள் வந்தன. இதையடுத்து, அரூர், மொரப்பூர், பொம்மிடி, கடத்தூர் காவல் நிலையப் பகுதியில் போலீஸார் ரோந்துப் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது, டாஸ்மாக் மதுப் புட்டிகளை பதுக்கி வைத்து கலப்படம் செய்து விற்பனை செய்ததாக இளமதி (30), பழனி (50), கண்ணன் (73), ராமச்சந்திரன் (75), சுரேஷ் (39), முத்து (47), கோவிந்தராஜ் (39) ஆகியோரை போலீஸார் கைது செய்து, அவர்களிடமிருந்து 51 மதுப் புட்டிகளை பறிமுதல் செய்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com