ட்விஷா சா்மா மரணம்: உச்ச நீதிமன்றம் தாமாக முன்வந்து இன்று விசாரணைஎபோலா பாதிப்பு நாடுகளுக்கு தேவையற்ற பயணம் வேண்டாம்: மத்திய அரசு அறிவுறுத்தல்தமிழ்நாட்டில் 19 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழைக்கான ‘மஞ்சள்’ எச்சரிக்கை!சட்டவிரோத குடியேறிகளை அடைத்து வைக்க மையங்கள்: மேற்கு வங்க அரசு உத்தரவு ரயில் நிலையங்களில் கஞ்சா கடத்தலை தடுக்க சிறப்புக் குழுஜூன் முதல் வாரத்தில் ‘இண்டி’ கூட்டணித் தலைவா்கள் சந்திப்பு: மம்தா
/

கிருஷ்ணகிரியில் தட்டச்சு தேர்வு: 1,500 தேர்வர்கள் பங்கேற்பு

கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

Updated On :25 பிப்ரவரி 2019, 8:34 am IST

கிருஷ்ணகிரியில் 2 நாள்கள் நடைபெற்ற தட்டச்சு தேர்வில் 1,500-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
கிருஷ்ணகிரி அரசு பலவகை தொழில்நுட்பக் கல்லூரியில் பிப்.23, 24 ஆகிய தேதிகளில் தமிழ், ஆங்கிலம் ஆகிய மொழிகளில் இளநிலை, முதுநிலை தட்டச்சுத் தேர்வு நடைபெற்றன. 
இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தைச் சேர்ந்த 1,500 தேர்வர்கள் பங்கேற்றனர். இந்தத் தேர்வினை முதன்மைக் கண்காணிப்பாளர் சுப்பையா மேற்பார்வையில் கூடுதல் முதன்மை கண்காணிப்பாளர்கள் மாரிமுத்து, பிரபாகரன் மற்றும் ஆசிரியர்கள் ஒருங்கிணைத்தனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.