கிருஷ்ணகிரியில் இந்து ஆன்மிக அமைப்புகள் கூட்டம், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இந்தக் கூட்டத்தில் திருவாசகம் முற்றோதல் குழுவினர், இஸ்கான் குழுவினர், பாலாஜி பக்த மண்டலி, வீர ஆஞ்சநேயா பஜனா மண்டலி என பல்வேறு இந்து அமைப்பினர் பங்கேற்றனர். இந்துக்களை அவமானப்படுத்தும் அரசியல் கட்சிகளைத் தேர்தலில் புறக்கணிப்பது என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. கூட்டத்தை சுவாமி விவேகானந்தர் இளைஞர்கள் குழுவினர்
ஒருங்கிணைத்தனர்.