முருக்கம்பள்ளத்தில் உள்ள ஸ்ரீ திரௌபதி அம்மன் கோயிலில் 45 - ஆம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா, கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது.
கிருஷ்ணகிரி மாவட்டம், முருக்கம்பள்ளம் கிராமத்தில் திரௌபதி அம்மன் கோயில் உள்ளது. இந்தக் கோயிலின் 45-ஆம் ஆண்டு மகாபாரத மகோற்சவ விழா கொடியேற்றத்துடன் திங்கள்கிழமை தொடங்கியது. இதையடுத்து தினசரி பிற்பகல் 3 மணி முதல் 6 மணி வரையில் 18 நாள்கள், மகாபாரத சொற்பொழிவும், ஏப்.19-ஆம் தேதி முதல் தொடர்ந்து 13 நாள்கள் இரவு 9 மணியளவில் மகாபாரத தெருக்கூத்து நாடகமும் நடைபெறுகிறது.
இந்த நிகழ்வுக்கான ஏற்பாடுகளை முருக்கம்பள்ளம், பாலேப்பள்ளி, எலத்தகிரி, காத்தாடிகுப்பம், வெண்ணம்பள்ளி, ஜோடுகொத்தூர், மேல் அக்ரஹாரம், மல்லிநாயனப்பள்ளி மற்றும் அதைச் சுற்றியுள்ள கிராமத்தினர் ஒருங்கிணைக்கின்றனர்.