மத்தூர் ஒன்றிய தேமுதிக நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
அக் கட்சியின் மாவட்ட பொருளாளர் பழனி தலைமை வகித்தார். மாவட்ட அவைத் தலைவர் கே.ஆர்.சின்ன ராசு, மாவட்ட துணைச் செயலாளர் எல் .முருகன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் கே.ஜி.மகேந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கிராமங்கள்தோறும் புதிய கட்சி கிளைகள் தொடங்குவது, உறுப்பினர்கள் சேர்க்கையை தீவிரப்படுத்துவது மற்றும் கட்சியின் தலைவர் விஜயகாந்த் பிறந்த நாளை விமரிசையாக கொண்டாடது என கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.